Thursday 7 June 2012

ரியல் எஸ்டேட் முதலீடு

ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் கனவிலும், நினைவிலும் நினைப்பது தனக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதைத்தான்.அதற்காக மனிதன் பல வழிகளில் முயற்சிக்கிறான்,கடைசியாக அவன் நாடுவது ரியல் எஸ்டேட்.தற்போது பெருகிவரும் தொழில்களில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.இதற்கு சிக்கலாக இருப்பது எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை,மற்றொன்று ரியல் எஸ்டேட் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவது.அதாவது நில மோசடி செய்வது.அதனால் நாம் வீடு அல்லது நிலம் வாங்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,அதற்கான வழிமுறைகளை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக சென்னை போன்ற தொழில் வர்த்தக ரீதியான நகரங்களில் இவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.சென்னையின் புறநகர் பகுதிகளில் இதன் தேவை
அதிகரித்துள்ளது,குறிப்பாக தாம்பரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,பெருங்களத்தூர் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பகுதிகளில் இருந்து விமான நிலையம்,இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்றவை மிக அருகில் அமைந்துள்ளது.

இது போன்ற பகுதிகளில் நாம் வீடு அல்லது நிலம் வாங்கும்போது நமது வாழ்கை தரமும் உயர்கிறது.இதற்காக
தற்போது பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.அதில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நம் கையில் தான் உள்ளது.இதற்கு ஒரு சரியான இணையதளம்.

Wednesday 23 May 2012

சென்னை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்!

சென்னை நகரம், தென் இந்தியாவில் உள்ள ஒரு சொர்க்கம்,தமிழ்நாட்டின் தலைநகரம் .இது இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும். ஏனெனில் மலிவு மற்றும் ஆடம்பரமான வசதிகள் அனைத்தும் எளிதாக கிடைக்கும்.தமிழ்நாட்டின் மிக பெரிய வணிக மற்றும் தொழில்துறை மையமாக சென்னை உள்ளது.சென்னை தென் இந்தியாவில் பெருமளவில் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்,கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் தொகை கொண்டது.இந்த நகரத்தில் ஆடம்பரமான குடியிருப்பு தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


சமீப காலமாக மக்கள் ரியல் எஸ்டேட்(Real Estate in Chennai) துறையில் முதலீடு செய்ய அதிகரித்துள்ளனர்.மக்கள் தங்கள் சேமிப்பை நல்ல முறையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்,இதனால் இதன் தேவை அதிகரித்துள்ளது.இதற்காக மக்கள் இணையதளத்தை நாடுகின்றனர் அல்லது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களை அணுகுகின்றனர்.ரியல் எஸ்டேட் நிலவரத்தில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவில் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவை சந்தித்திருந்தது. வீட்டு மனை, வீடு விலை 30 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.


சென்னை பொறுத்தவரையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாம் முதலீடு செய்யலாம்.இதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர்,பல்லாவரம்,தாம்பரம்,செங்கல்பட்டு போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.நீங்கள் குடியிருப்பதற்காக வீடு வாங்குபவராக இருந்தால் அதற்குள் எல்லா வசதிகளும் உள்ளதா என்று பார்த்து வாங்குவதுதான் நல்லது.சாலை வசதி,தண்ணீர் வசதி,மின்சாரம்,மருத்துவமனை, விளையாட்டுத் திடல்,பள்ளிவாசல், போன்றவை அருகில் உள்ளனவா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது மிகச் சிறந்த முதலீடுதான்.இதற்கு ஒரு சரியான இணையதளம்(Property).